
கொழும்பு,செப் 10
கனடா பிறம்ரன் மாநகர முதல்வர் பற்றிக் பிறவுணுடன் யாழ் மாநகர சபை முதல்வர் மணிவண்ணன் சந்திப்பு ஒன்றை நிகழ்த்தினார்.
இக் கலந்துரையாடலில் இரண்டு மாநகரங்களினதும் செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெற்றது.
முகநூல் மூலம் மணிவண்ணன் தெரிவித்ததாவது,
பிறம்ரன் மாநகர சபையின் துறை சார் நிபுணர் ஒருவரினை யாழ்ப்பாணத்திற்கு அனுப்புவதற்கும் அவர் மூலம் யாழ்.மாநகர சபையின் ஊளியர்களுக்கு பயிற்சிகளையும் அனுபவ பகிர்வுகளையும் வழங்குவதற்கான இணக்கப்பாட்டினை பிறம்ரன் மாநகர முதல்வர் வழங்கினார்.
ஒக்டோபர் மாதம் நடைபெறவுள்ள பிறம்ரன் மாநகர முதல்வர் தேர்தலில் மீண்டும் பற்றிக் பிறவுண் வெற்றி பெறவேண்டும் என்று வாழ்த்துக்களை தெரிவித்ததாக குறிப்பிட்டார்.
இச்சந்திப்பில் கனடா தமிழ் மக்கள் பலரும் கலந்து கொண்டார்.
பற்றிக் பிறவுண் முன்னர் இலங்கையின் இறுதி யுத்த காலத்தில் கனடா பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலப்பகுதியில் முதன் முதலில் இலங்கையில் இன அழிப்பு நடைபெறுகின்றது என்பதை கனடா பாராளுமன்றில் சுட்டிக்காட்டி யுத்தத்தை நிறுத்த கனடா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேசியவர் என்பதும் தொடர்ந்தும் தமிழ் மக்களுக்காக உரக்க குரல் கொடுப்பவர் என்பதும், பிறம்ரன் மாநகரில் தமிழ் இன அழிப்பு நினைவு தூபியை நிறுவ இடம் ஒதுக்கி கொடுத்துள்ளார் என்தும், இவ்வாறான செயற்பாட்டினால் பல நெருக்கடிகளை தனது அரசியலில் எதிர் கொள்பவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இச்சந்திப்பில் யாழ்ப்பாணம் வீதி என பிறம்ரன் நகர வீதி ஒன்றுக்கு பெயரிட தனது எண்ணத்தையும் பற்றிக் பிறவுண் வெளிப்படுத்தினார்.