சட்டவிரோதமான முறையில் 10 கஜ முத்துக்களை விற்பனை செய்ய முயன்ற மூவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
அம்பாறை, வரிப்பத்தான்சேனை அஸ்ரப் ஞாபகார்த்த மைதான பகுதியில் இச்சட்டவிரோத செயற்பாடு இடம்பெறவுள்ளதாக கல்முனை பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு நேற்று மாலை கிடைத்த தகவலையடுத்து குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கஜ முத்துக்களை 10 மில்லியன் ரூபாவிற்கு விற்பனை செய்ய சந்தேகநபர்கள் முயன்றுள்ளதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
வரிப்பத்தான்சேனை, மல்வத்தை பகுதியை சேர்ந்த 45, 50 வயது மதிக்கத்தக்க மூவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் மூவர் மற்றும் சான்று பொருட்கள் யாவும் இறக்காமம் பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ளதுடன், நீதிமன்ற நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் உயர்மட்ட குழு நிந்தவூருக்கு விஜயம்!