கல்முனை இளைஞனின் ஆதங்கம்!

வடகிழக்கு அபிவிருத்தி நாயகர்களே !!!

அமைச்சர், இராஜாங்க அமைச்சர், அபிவிருத்தி குழு தலைவர்கள் நீங்கள் இப்படிப்பட்ட ஒரு பதவியில் இருந்து கொண்டு ஏன் இன்றுவரை கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்தி கொடுக்க வில்லை…

கட்சி பேதங்களை தாண்டி ..

கல்முனை தமிழ் மக்களின் கனவுகளில் ஒன்றான வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்த ஒற்றுமையாக செயல்படுங்கள்….

சரி நடந்ததை விடுவோம்

கல்முனை தமிழர்களின் பூர்வீகம்..

முஸ்லீம் கட்சிகள் வரவு செலவு திட்டத்தை எதிர்ப்பதாக தீர்மானம் எடுத்தும்

வரவு செலவு திட்டத்தை ஆதரித்து கல்முனையை தங்களின் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடு கல்முனை பள்ளி வாசல்களில் அறிக்கை விடுகிறார்கள்.

தனி ஒருவராக ஹரிஸ் செயல்படும் போது

நீங்கள்… தேர்தல் காலங்களில் என்னத்தை சொன்னீர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பு மக்களுக்கு எதையும் செய்யாமல் தீர்வை மட்டும் பேசுகின்றனர்.

எங்களுக்கு சந்தர்ப்பம் தந்து பாருங்கள் அமைச்சு பதவிகளை எடுத்து தமிழ் மக்களின் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறோம் என்று தானே கூவி கூவி திரிந்தீர்கள்.

தற்போது நீங்கள் ஏன் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்தி கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வரவு செலவு திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோரிக்கையை முன்வைத்து செயல்பட முடியாது..

வாக்களித்த மக்களுக்கு நன்றி கடனாக இதை செய்யுங்கள்..

அமைச்சர்..
இராஜாங்க அமைச்சர்…
அபிவிருத்தி குழு தலைவர்கள்…
பாராளுமன்ற உறுப்பினர்கள்…
மட்டு அம்பாறை பிரதமரின் இணைப்பாளர்…
மொட்டு கட்சியின் இணைப்பாளர்கள்….

இந்த பெரிய பலத்தோடு இருக்கும் நீங்கள் சாதாரணமாக ஒரு பாராளுமன்ற உறுப்பினரை எதிர்க்க முடியாத???( ஹரிஷ்)

தனது கட்சியை தூக்கி எறிந்து விட்டு..

கல்முனை முஸ்லீம் மக்களுக்காக வரவு செலவு திட்டத்தை ஆதரித்து கல்முனையை தங்களின் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடு அரசாங்கத்தை ஆதரிக்க முடிவெடுத்துள்ளார்கள்..

இதுக்கு பின்பும் வடகிழக்கை மீட்கப் போகிறோம் என்று,….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *