ரக்குவானை பொலிஸ் நிலையத்தில் 28 அதிகாரிகளுக்கு கொரோனா!

இரத்தினபுரி, ரக்குவானை பொலிஸ் நிலையத்தின் 28 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளதாக கொடகவெல ரக்குவானை பொது சுகாதார பரிசோதகர் எஸ் எஸ்.முனவீர தெரிவித்துள்ளார்.

ரக்குவானை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள் மூலம் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி மற்றும் சிறுகுற்ற முறைப்பாட்டுப் பிரிவின் பொறுப்பதிகாரி ஆகியோருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் பொலிஸ் நிலையத்தின் வழமையான கடமைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

ஆசிரியரை கூரிய ஆயுதத்தால் தாக்கிவிட்டு தப்பிச்சென்ற மாணவர்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *