வலி. தென்மேற்கு பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பாடசாலைகளுக்கு ஒரு ரூபா வீதம் சேதனப் பசளைகளை விநியோகிப்பதற்கு கடந்த சபை அமர்வின்போது தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வலி.தென்மேற்குப் பிரதேசசபையின் ஆளுகைக்குட்பட்ட பாடசாலைகளில் பெறப்படுகின்ற திண்மக்கழிவுகளில் இருந்து 5 வீத திண்மக்கழிவுகளின் மூலம் பெறப்படும் சேதனப் பசளையை பாடசாலைகளின் தோட்ட விவசாய நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கு ஒரு ரூபாவுக்கு வழங்கலாம் என்று பிரதேச சபையின் தவிசாளர் ஜெபநேச னால் திட்டமொன்று முன்வைக்கப்பட்டது.
இதன்மூலம் பாடசாலைகளில் சுழற்சி முறையில் ஒழுங்காக திண்மக்கழிவகற்றல் இடம்பெறுவதோடு , பாடசாலைகளின் சுத்தம் மற்றும் குறைந்த சலுகையிலான சேதனப்பசளை என பல்நோக்கங்களை அடைய முடியும்.
அத்துடன் இதற்கு சண்டிலிப்பாய்க் கல்விக்கோட்டமும் ஒத்துழைப்பு வழங்கியுள்ளது என்றும் தெரிவித்தார். இதன் போது குறித்த திட்டத்துக்கு ஏகமனதான அங்கீகா ரம் சபையால் வழங்கப்பட்டது.
பிற செய்திகள்