
முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒருவர் கொரோனாத் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நெடுங்கேணி, மாறாஇலுப்பையைச் சேர்ந்த 44 வயதுடைய ஒருவரே உயிரழிந்துள்ளார்.
சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டிருந்த இவருக்குக் கொரோனாத் தொற்றும் ஏற்பட்ட நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார்.
இவரது உடல் கொரோனா சுகாதார விதிமுறைகளுக்கு அமைய வவுனியா, பூந்தோட்டம் மின் தகன மேடையில் தகனம் செய்யப்படும் என்று சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.