
நாட்டில் நேற்றுமுன்தினம் மேலும் 19 பேர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளனர் என்று அரச தகவல் திணைக்களம் நேற்று அறிவித்தது.
உயிரிழந்தவர்களில் 12 பேர் ஆண்கள் என்றும், 7 பேர் பெண்கள் என்றும் அரச தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த உயிரிழப்புகளுடன் நாட்டில் இதுவரை கொரோனாத் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 127 ஆக உயர்ந்துள்ளது.
அதேவேளை, நாட்டில் நேற்று 697 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று அரச தகவல் திணைக்களம் தெரிவித்தது.
அதற்கமைய நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொரோனாத் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 56 ஆயிரத்து 626 ஆக உயர்ந்துள்ளது.