உள்ளகப்பொறிமுறையை வலுப்படுத்துவதன் அவசியம் குறித்து ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தலைவரிடம் இலங்கையின் பிரதிநிதிகள் குழு வலியுறுத்தல்
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாஸ ராஜபக்ச ஆகியோர் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபையின் தலைவர் பெடாரியோ வில்லியர்ஸைச் சந்தித்துள்ளனர்.
உள்நாட்டுப் பொறிமுறைகளை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் இதன்போது மீண்டும் வலியுறுத்தியதாக வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி குறிப்பிட்டார்.
மனித உரிமை நடைமுறைகளை மேம்படுத்துவதில் இலங்கையின் தொடர்ச்சியான ஈடுபாடு மற்றும் தற்போதைய சவால்களை எதிர்கொள்வதற்கான பங்களிப்பு தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது எனவும் அவர் மேலும் கூறினார்.
பிற செய்திகள்