யாழில் சிவில் கால்ப்பந்தாட்ட அணிகளுக்கு இடையில் உதைபந்தாட்ட போட்டி!

வடக்கிலுள்ள இளைஞர்களின் விளையாட்டுத் திறனை வலுப்படுத்துகின்ற வகையில் இராணுவத்தின் 55 ஆவது காலாட் படைப்பிரிவின் சேனாதிபதி மேஜர் ஜெனரல் பிரசன்ன குணரத்ன ஆர்எஸ்பீ என்மயூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களுடைய எண்ணக்கருவிற்கு அமைவாக 55 ஆவது படைப்பிரிவின் கீழ் காணப்படுகின்ற கட்டைக்காடு சென்மேரிஸ் விைையாட்டுக் கழகத்தின் கால்ப்பந்தாட்ட அணியினருக்கும் 51 ஆவது படைப்பிரிவின் கீழ் காணப்படுகின்ற யாழ் திருக்குமரன் விளையாட்டுக் கழகத்தின் கால்ப்பந்தாட்ட அணியினருக்கும் இடையில் நட்பு ரீதியிலான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியானது கட்டைக்காடு சென் மேரிஸ் விளையாட்டுக் கழகத்தின் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

பிரதேச வாரியிலான விளையாட்டக் கழகங்களின் அணிவீரர்களினுடைய திறமைகளினை வெளிக்கொணர்வதன் முகமாகவும், இராணுவத்தினருக்கும், தமிழ் இளைஞர்களுக்கும் இடையிலான நட்புறவினையும், இன நல்லிணக்கத்தினையும் வலுப்படுத்தும் முகமாகவும் நடைபெற்ற இந்தப் போட்டியானது யாழ். பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விஜேயசுந்தர ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டீயூ தலைமையில் நடைபெற்றுது.

நட்பு ரீதியாக நடைபெற்ற இந்தப் போட்டியில் 55 ஆவது காலாட் படைப்பிரிவினரின் அனுசரணையில் களமிறங்கிய கட்டைக்காடு சென்மேரிஸ் அணியானது 6 – 0 என்ற வகையில் கோல்களை அடித்து போட்டியினை தம்வசமாக்கியது பின்னர் வெற்றிபெற்ற அணிக்கான சான்றிதழ்கள் மற்றும் வெற்றிக்கிண்ணத்தினை நிகழ்வின் பிரதம விருந்தினராக கலந்து கொண்டிருந்த யாழ். பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விஜேயசுந்தர ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்மயூ வழங்கிவைத்தார்.

மேலும் இந்நிகழ்வில் 51 மற்றும் 52 ஆவது படைப்பிரிவுகளின் சேனாதிபதிகள், முன்னடத்தும் பிரதேசம் வடக்கு கட்டளைத்தளபதி, யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் பிரிக்கேடியர் பிரதான அதிகாரி, 552 மற்றும் 553 ஆவது படைப்பிரிவுகளின் படைத்தளபதிகள், அரச உத்தியோகத்தர்கள், படையணிகளின் கட்டளை அதிகாரிகள் மற்றும் இராணுவ வீரர்கள் பார்வையாளர்கள் என பெருமளவானோர் கலந்து கொண்டிருந்தனர்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *