விவசாயிகளின் பிரச்சனை : பின்னனியில் உள்ளவர்களின் பெயர் வெளியிடப்போவதாக அமைச்சர் எச்சரிக்கை

நெல் கொள்வனவு உள்ளிட்ட விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு இரண்டு நாட்களில் தீர்வு கிடைக்காவிட்டால், காலம் தாழ்த்துபவர்களின் பெயர்கள் வெளிவரும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

விவசாயப் பிரச்சினைகளுக்கு விரைவாகத் தீர்வுகாண ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இருக்கின்றபோதும் அவற்றை சீர்குலைக்கும் வகையில் ஒருவர் அரசாங்கத்தில் இருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அநுராதபுரம் மாவட்டத்தில் விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடலின் போதே விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர இதனைக் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி தலைமையில் நாளை அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளதாகவும், நாளை மறுதினம் விவசாய அமைச்சின் அதிகாரிகளுடன் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *