இராஜாங்க அமைச்சர்களின் நியமனம் தேவை தானா? நசுருதீன் கேள்வி!

நாட்டில் தற்போதைய நெருக்கடி நிலைமைக்கு மத்தியில் இலங்கையில் ஒரு வேலை உணவின்றி 6 இலட்சம் பேர் பட்டினியால் வாடுவதாக உலக உணவு ஸ்தாபனம் அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில் 37 இராஜாங்க அமைச்சர்களின் நியமனம் தேவைதானா என நல்லாட்சிக்கான தேசிய முண்ணனியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளரும் கிண்ணியா நகர சபை உறுப்பினருமான எம்.எம்.நசுருதீன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்நிலையில், கிண்ணியாவில் இன்று (11)இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில் நாட்டு மக்கள் மீது அக்கரை செலுத்தாத பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாதளவுக்கு இராஜாங்க அமைச்சர்களின் நியமனம் வேதனையளிக்கிறது .

அன்றாட ஜீவனாம்சத்துக்கு தடுமாறும் அப்பாவி மக்களின் நிலையை கருத்திற் கொள்ளாது கட்சிகளையும் அரசாங்கம் சார்ந்த கட்சி பிரதிநிதிகளும் அமைச்சு பதவிகளை பெறுவதும் கட்சிகளை கட்டியெழுப்பவும் காட்டும் கரிசனை நாட்டின் மீதும் மக்கள் மீதும் அனுவளவும் காட்டவில்லை இதனால் நாடு அதாளபாதாளத்துக்கு சென்று கொண்டிருக்கிறது.

அரசியல் சுமூகமான நிலை உருவாகவில்லை பொருட்களின் விலையோ ஆகாயத்தை தொடுமளவிற்கு ஏறியுள்ளது இவ்வாறான நிலையில் நாட்டை குட்டிச்சுவராக்குவதற்கு சேறு பூசும் ஒரு நிலையை வரிந்து கட்டுமளவுக்கு இந்த அரசாங்கம் செயற்படுகிறது.

யுத்தத்தின் பின் நிரந்தரமாக சந்தோசமான வாழ்வு வாழ கனவு கண்ட மக்களின் நிலை தற்போது சின்னா பின்னமாகியுள்ளது இவ்வாறான நிலை தொடருமானால் நாட்டு மக்களின் நிலைமை பாதிக்கப்படும் பல இராஜாங்க அமைச்சுக்களை வழங்குவதன் மூலம் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது மக்களின் நலனில் மீது அக்கரை செலுத்த முன்வாருங்கள் என்றார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *