கல்வித் துறையில் ஓய்வுபெற மறுக்கும் அதிகாரிகள் குழு! – இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு

கல்வி நிர்வாக சேவையில் 60 வயதை பூர்த்தி செய்த அதிகாரிகள் குழுவொன்று சுற்றறிக்கையை மீறி மேலும் 5 வருடங்கள் சேவையில் தொடர முயற்சிப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

கல்வி நிர்வாக சேவையில் உயர் பதவிகளை வகிக்கும் உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை சுமார் 100 எனவும், அவர்களில் 38 உத்தியோகத்தர்களே இவ்வருட இறுதியில் ஓய்வு பெறவுள்ளதாகவும், அவர்கள் ஓய்வு பெற்றாலும் கல்வித்துறையில் எந்த பாதிப்பும் ஏற்படாது எனவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

அந்த அதிகாரிகள் ஓய்வு பெற்ற பிறகு தகுதியை பூர்த்தி செய்த அதிகாரிகள் பெரும்பான்மையாக இருப்பதால் அவர்களுக்கு அந்த பதவிகளுக்கு வாய்ப்பளிக்கலாம் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் ஓய்வுபெற உள்ள சில அதிபர்கள் ஒரே பாடசாலையில் பல ஆண்டுகளாக பணிபுரிவதால், இளமை மற்றும் புதிய திட்டங்களை செயல்படுத்த முடியாமல், அந்த பாடசாலைகளின் பரீட்சை முடிவுகள் குறைய தொடங்கி உள்ளதாகவும் ஸ்டாலின் கூறினார்.

கல்வி நிருவாக சேவையில் சுமார் எழுபது முதல்தர தகைமை பெற்ற உத்தியோகத்தர்கள் உள்ளதாகவும், அதிபர்கள் இடமாற்றம் செய்யப்படாமையால் பல வருடங்களாக பாரிய பிரச்சினையை எதிர்நோக்கி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

தற்போது பணிபுரியும் கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளின் பணிமூப்பு மற்றும் தகுதியின் அடிப்படையில் முறையான நடைமுறைப்படி அவர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு முதல்வர் மற்றும் பிற பதவிகள் வழங்கப்பட வேண்டும் என்றும் ஸ்டாலின் மேலும் தெரிவித்தார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *