இன்று ஆரம்பமாகின்றது ஜெனிவா 51ஆவது கூட்டத்தொடர்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடர் இன்று திங்கட்கிழமை (12) ஆரம்பமாகவுள்ளது.

இதன்போது மனித உரிமைகள் ஆணையாளர்கள் ச்சேல் பச்லெட்டினால் இலங்கை தொடர்பான எழுத்துமூல அறிக்கை வெளியிடப்பட்டு சிறிலங்கா குறித்த விவாதமும் இடம்பெறவுள்ளது.

இந்தக் கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தலைமையில் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச மற்றும் சட்ட மா அதிபர் திணைக்கள அதிகாரிகள் அடங்கிய அரச உயர்மட்டப் பிரதிநிதிகள் குழு கடந்த செவ்வாய்க்கிழமை ஜெனிவா பயணமாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *