ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஒன்றுகூடலில் கலந்துகொள்ளுமாறு புலம்பெயர் தமிழர்களுக்கு மணிவண்ணன் அழைப்பு!

ஐ.நா. சபையின் 52ஆவது மனித உரிமைகள் கூட்டத் தொடர் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகவுள்ளது.

இந்த நிலையில், இலங்கையில் இடம்பெற்ற இன அழிப்புக்கு எதிராக ஐக்கியநாடுகள் சபையின் முன் அமைந்துள்ள முருகதாசன் திடலில் இன்று பிற்பகல் 2.00 மணியளவில் ஒன்று கூடல் ஒன்றும் இடம்பெறவுள்ளது.

இதில் கலந்து கொள்வதற்காக யாழ்.மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் நேற்று ஜெனீவா சென்றடைந்துள்ளார்.

இதேவேளை, இன்றைய தினம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஒன்றுகூடலில் புலம்பெயர்ந்த தமிழ் உறவுகள் அனைவரையும் கலந்துகொண்டு தமிழ் மக்களின் நீதிக்கான குரலுக்கு வலுச் சேர்க்குமாறு யாழ்.மாநகர முதல்வர் ஜெனீவாவிலிருந்து வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *