7 நாட்களாக உண்ணாவிரதம் இருக்கும் தனது மகனை விடுதலை செய்யக்கோரி யாழில் போராட்டம்!

மகசின் சிறைச்சாலையில் 7 நாட்களாக உண்ணா விரதம் இருக்கும் தனது மகனை விடுதலை செய்ய கோரி யாழில் செல்வராசா உதயசிலம் என்பவரின் தாய், மனைவி, சகோதரர்கள் பலரும் இணைந்து இன்று போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.

இவரை 04.03.2020 அன்று மருதங்கேணி பொலிஸாரினால் சந்திப்பதாக அழைத்து சென்றவேளை கைது செய்தனர்.

இவர் மனித உரிமை செயற்பாட்டார், பொது வேலைகளிலும் ஈடுபடுபவர், கைது செய்த விடயத்திற்கு இவரிற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்பனவற்றை உள்ளடக்கிய அவரின் புகைப்படம் தாங்கிய பதாகையினை ஏந்தியவாறு போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.

குறித்த உறவினர்கள் வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் முன்பாக இன்று காலை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் 12 பேர், தமது விடுதலையை வலியுறுத்தி கொழும்பு மகசின் சிறைச்சாலையில் உண்ணாவிரத போராட்டத்தை கடந்த செவ்வாய்க்கிழமை ஆரம்பித்தனர்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கடந்த 2019, 2020 ஆகிய காலப்பகுதிகளின் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இளைஞர்களே மேற்படி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

விடுதலை புலிகள் மீளுருவாக்கம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பூநகரி முக்கொம்பன் பகுதியில் கைது செய்யப்பட் உ.உமாகாந்தன், ர.சயந்தன், வி.இன்பராஜ், மகேந்திரன் பார்த்தீபன், வடமராட்சி கிழக்கு கோவிலை சேர்ந்த செ.உதயசிவம் உட்பட 12 பேர் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்

தம்மை வழக்கில் இருந்து விடுதலை செய்யவேண்டும் அல்லது பிணையிலாவது விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை சிறைச்சாலை நிர்வாகத்திடம் கடிதம் மூலம் அறிவித்து தமது போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *