
கண்டி, செப் 12
கண்டி மாவட்டத்திற்கு உட்பட்ட சில பகுதிகளில் நாளை 13ஆம் திகதி காலை 6 மணி முதல் பிற்பகல் 8 மணி வரையிலான 14 மணிநேர நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
கட்டுகஸ்தோட்டவில் அமைந்துள்ள பாரிய கண்டி நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் திருத்த வேலைகள் காரணமாகவே இவ்வாறு நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய குறித்த காலப்பகுதியில் ஹரிஸ்பத்துவ, அக்குறணை, பூஜாப்பிட்டிய, பாத்ததும்பர, கண்டி மாநகர சபைக்குட்பட்ட பிரதேசம், அம்பிட்டிய மற்றும் ஹந்தான ஆகிய பகுதிகள் நீர் விநியோத் தடை ஏற்படவுள்ளது.
இதனால் பாவனையாளர்களுக்கு ஏற்படும் அசெளகரியங்களுக்கு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை கவலை தெரிவிப்பதோடு, நீரை முன்கூட்டியே சேமித்து வைத்து சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
இதுபற்றிய மேலதிக விபரங்களுக்கு 1939 என்ற இலக்கத்துடன் தொடர்புகொள்ள முடியுமெனவும் தெரிவிக்க்பபட்டுள்ளது.