உள்ளூராட்சி தேர்தலை நடத்துவது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு விரைவில் !!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஒக்டோபர் 30ஆம் திகதிக்கு பின்னர் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி நிறுவனங்களின் பதவிக்காலம் கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிலையில், கால அவகாசம் ஒரு வருட காலத்திற்கு நீடிக்கப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், உள்ளுராட்சி மன்றத் தேர்தலை அடுத்த வருடம் மார்ச் மாதத்திற்கு முன்னர் நடத்த வேண்டும் என்பதோடு, அதற்குரிய பணிகளையும் கடமைகளையும் மேற்கொள்ளத் தேவையான சூழலை தயார்படுத்த வேண்டும்.

இதன்படி, நீடிக்கப்பட்ட கால அவகாசம் நிறைவடைவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னதாக இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஆனால், தற்போது 30ஆம் திகதி வாக்காளர் பட்டியலில் கையெழுத்திட தேர்தல்கள் ஆணைக்குழு திட்டமிட்டுள்ள நிலையில் வாக்காளர் பட்டியலில் கையொப்பமிடும் நடைமுறையை பின்பற்றி தேர்தலை நடத்துவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *