பாராளுமன்ற ஒன்றியத்தின் செயலாளர் நாயகம் மார்ட்டின் சுன்கொங் இன்று காலை பாராளுமன்றத்திற்கு வருகைதந்து சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த போது விடுத்த அழைப்பின் பேரில் அவர் நேற்று (11) இலங்கைக்கு வந்துள்ளார்.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நேற்று மார்ட்டின் சொங்கோன் அவர்களை பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க மற்றும் பாராளுமன்ற பிரதி குழு தலைவர் அங்கஜன் இராமநாதன் ஆகியோர் வரவேற்றனர்.
பாராளுமன்றங்களுக்கு இடையிலான ஒன்றியத்தின் செயலாளருக்கு சபாநாயகரால் அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று இரவு விருந்தளிக்கப்படவுள்ளது.
பிற செய்திகள்