தமிழ் மக்களின் உரிமைக்காக 15.09.1987 தொடக்கம் 26.09.1987 வரையான 12 நாட்கள் அகிம்சை வழியில் யாழ்.நல்லூரில் நீராகாரம் அருந்தாமல் உண்ணாவிரதப் போராட்டம் நடாத்தி ஈகைச் சாவைத் தழுவிக் கொண்ட தீயாக தீபம் திலீபனின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் வழமைபோல் இம்முறையும் தீயாக தீபம் திலீபன் அவர்களின் நினைவிடத்தில் நடைபெறுவதற்குரிய ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
• எதிர்வரும் 15 ஆம் திகதி வியாழக்கிழமை நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டு 26. ஆம் திகதி திங்கட்கிழமை வரையான 12 நாட்கள் தொடர்ந்து நடைபெறும்.
• 15 ஆம் திகதி வியாழக்கிழமை நினைவேந்தல் ஆரம்ப நிpழ்வுகள் காலை .930 மணிக்கு ஆரம்பிக்கப்படும்தியாக தீபம் திலீபன் உண்ணாவிரத மேடையில் அமர்ந்த நேரமாகிய காலை 9.45 க்கு திலீபனின் திருவுருவப்படம் பண்டிதர் அவர்களின் தாயாரினால் திரைநீக்கம் செய்து வைக்கப்படும். அதனைத் தொடர்ந்து நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெறும். இதில் முதன்மை சுடரினை பண்டிதர் அவர்களின் தாயார் ஏற்றிவைப்பார்.
• தினமும் காலை 9.00 மணிக்கு நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெறும். நினைவேந்தல் நிகழ்வுகளின் போது ஒவ்வொரு நாளும் முதன்மைச் சுடரினை மாவீரச் செல்வங்களின் பெற்றோர்கள் ஏற்றிவைப்பதற்கு ஏற்றவகையில் ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது
• 18 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு நினைவேந்தல் நிகழ்வுகளை அடுத்து இரத்த தான நிகழ்வு நடைபெறும் எனவும்
• தியாக தீபன் திலீபன் ஈகைச் சாவினை தழுவிக்கொண்ட நாளாகிய 26 ஆம் திகதி திங்கட்கிழமைக்குரிய நினைவேந்தல் நிகழ்வுகள் தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழு அறிவித்துள்ளது
பிற செய்திகள்