
நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பது தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் பணிப்பாளர் நாயகம் கெனிச்சி யோகோயாமாவிற்கும் இடையில் இன்று இடம்பெற்றது.
ஜனாதிபதி செயலகத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஆசிய அபிவிருத்தி வங்கியினால் வழங்கப்படக்கூடிய அதிகபட்ச ஆதரவு மற்றும் அதனை பல்வேறு துறைகளுக்கு எவ்வாறு வழங்குவது என்பது தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நெருக்கடியை சமாளிப்பதற்கு வழங்கப்படக்கூடிய இருதரப்பு பலம் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள் குழுவும் இதில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.