மகா­ரா­ணி­யின் உடல் 19 இல் நல்­ல­டக்­கம்

மகா­ராணி எலி­ச­பெத்­தின் இறு­திச்­ச­டங்கு எதிர்­வ­ரும் 19ஆம் திகதி நடை­பெ­றும் என பக்­கிங்­ஹாம் அரண்­மனை அறி­வித்­துள்­ளது.

பிரிட்­டன் மகா­ராணி தனது 96 வய­தில் உடல்­ந­லக்­கு­றைவு கார­ண­மா­க கடந்த 8ஆம் திகதி சாவெய்­தி­னார்.

அவ­ரது மறை­வுக்கு உல­க­நா­டு­க­ளின் தலை­வர்­கள் இரங்­கல் தெரி­வித்து வரு­கின்­ற­னர்.

அரச குடும்­பத்­தைச் சேர்ந்­த­வர்­கள் ராணிக்கு இறுதி மரி­யாதை செலுத்­தும் வித­மாக மகா­ரா­ணி­யின் அதி­கா­ரபூர்வ இருப்­பி­ட­மான ஸ்கொட்­லாந்­தின் தலை­ந­க­ரான எடின்­பர்க்­கில் உள்ள ‘ஹோலி­ரூட்­ஹ­வுஸ்’ மாளி­கை­யில் அவரது உடல் வைக்­கப்­பட்­டுள்­ளது.

பின்பு பிரிட்­டன் மக்­கள் இறுதி மரி­யாதை செலுத்­து­வ­தற்­காக எலி­ச­பெத்­தின் உடல் லண்­ட­னில் உள்ள வெஸ்ட்­மி­னிஸ்­டர் மண்­ட­பத்­தில் 4 நாள்­கள் வைக்­கப்­ப­ட­வுள்­ளது.

அத­னை­ய­டுத்து மறைந்த இள­வ­ர­சர் பிலிப் நல்­ல­டக்­கம் செய்­யப்­பட்ட அதே ­யி­டத்­தில் ராணி­யின் உடல் செப்­ரெம்­பர் 19ஆம் திகதி நல்­ல­டக்­கம் செய்­யப்­ப­டும் என பக்­கிங்­ஹாம் அரண்­மனை அறி­வித்­துள்­ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *