
மகாராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கு எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெறும் என பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது.
பிரிட்டன் மகாராணி தனது 96 வயதில் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 8ஆம் திகதி சாவெய்தினார்.
அவரது மறைவுக்கு உலகநாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ராணிக்கு இறுதி மரியாதை செலுத்தும் விதமாக மகாராணியின் அதிகாரபூர்வ இருப்பிடமான ஸ்கொட்லாந்தின் தலைநகரான எடின்பர்க்கில் உள்ள ‘ஹோலிரூட்ஹவுஸ்’ மாளிகையில் அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது.
பின்பு பிரிட்டன் மக்கள் இறுதி மரியாதை செலுத்துவதற்காக எலிசபெத்தின் உடல் லண்டனில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் மண்டபத்தில் 4 நாள்கள் வைக்கப்படவுள்ளது.
அதனையடுத்து மறைந்த இளவரசர் பிலிப் நல்லடக்கம் செய்யப்பட்ட அதே யிடத்தில் ராணியின் உடல் செப்ரெம்பர் 19ஆம் திகதி நல்லடக்கம் செய்யப்படும் என பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது.