
கொழும்பு மகசின் சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பில் ஈடுபட்டுவரும் இளைஞர்களினுடைய உறவினர்கள் யாழ்ப்பாணத்திலுள்ள வடமாகாண ஆளுநர் செயலகம் முன்பாக இன்று காலை முதல் உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்போது சிறையில் உண்ணாவிரத போராட்டத்தில் உள்ள ஒரு சிறைக்கைதியின் மனைவி சமூக ஊடகத்துக்கு கண்ணீர் மல்க கருத்து தெரிவித்திருந்தார்.
எனது கணவர் இன்பராஜ் 2020.03.17 ஆம் திகதி பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்து 2 வருடங்களாக எந்தவொரு விசாரணையும் இன்றி கொழும்பு மகசின் சிறைச்சாலையில் உள்ளார்.
இன்று தொடர்ந்து 7 நாட்களாக உண்ணா விரதத்தில் இருக்கிறார்.எனது கணவருக்கு பொது மன்னிப்பு வழங்கி அவரை சிறையில் இருந்து விடுதலை செய்து தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
விசாரணை செய்து விடுதலை செய்வதாக கூறியிருந்த போதிலும் 2 வருடங்கள் ஆகியும் அவரை விடுதலை செய்யாமல் எந்தவொரு முடிவு இன்றியும் வழக்கல் தாக்கல் செய்யாமல் வைத்திருக்கிறார்கள். சிறையில் உள்ள அனைவரும் மிகவும் கஷ்டமான நிலையில் உள்ளார்கள்.
ஒரு வேளைக்கே சாப்பிடாமல் இருக்க முடியாது ஆனாலும் அவர்கள் 13 பேரும் உண்ணாவிரதத்தில் இருக்கிறார்கள் ,அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும். விடுதலை வழங்கினால் தான் நாங்கள் இந்த உண்ணா விரத போராட்டத்தினை கைவிடுவோம் .இல்லையேல் விடுதலை செய்யும் மட்டும் இந்த உண்ணா விரதத்தில் இருப்போம். என்றார் .
பிற செய்திகள்