தன்னை எந்நேரத்திலும் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் பிரதி மேயர் ஈசன் தெரிவிப்பு!

யாழ்ப்பாணத்தில் வசிக்கும் பொதுமக்கள் எவரும் யாழ் மாநராட்சியின் சேவை தொடர்பான சிக்கல்கள் அசௌகரியங்கள் எதுவாக விருப்பினும் தனது அலுவலகத்தில் எவ்விதமான தடைகளுமின்றி தன்னை சந்தித்து தெரிவிக்கலாம் என பிரதி மேயர் ஈசன் தெரிவித்துள்ளார்.

தற்போதுள்ள சூழ்நிலையில் மாநகராட்சி நடவடிக்கைகளிற்கிடையில் பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களைச் சந்திப்பதாக தான் கேள்விப்படுவதாகவும் அவற்றை விரைவில் தீர்த்து வைப்பதற்காகவே இவ்வாறான ஒர் அறிவிப்பை வெளியிடுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்

தற்போதுள்ள சூழ்நிலையில் பிரதி மேயர் ஈசன் பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களின் சிக்கல்களை கேட்டறிந்து அவற்றை உடனுக்குடன் தீர்த்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *