நெல் கொள்வனவு செய்வதற்கு பணப் பற்றாக்குறை பிரச்சினைக்கு அமைச்சரவையிலும் வாழ்க்கைச் செலவுக் குழுவிலும் முன்வைத்து தீர்வை எட்டவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
புதிய பருவத்தில் நெல் கொள்வனவு செய்வதற்கு அரச வங்கிகளுக்கு போதிய பணம் கிடைக்கவில்லை என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர கடந்த 7ஆம் திகதி பாராளுமன்றத்தில் வெளிப்படுத்தினார்.
இதேவேளை வாழ்க்கைச் செலவுக் குழு நாளை (12) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கூடவுள்ளது.
விவசாயிகளின் நெல் கொள்வனவுக்கான பணத்தை பெற்றுக்கொள்வது தொடர்பில் அமைச்சரவையிலும் வாழ்க்கைச் செலவுக் குழுவிலும் இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும் அதற்கான பணத்தை வங்கிகளிலோ அல்லது வேறு வழிகளிலோ பெற்றுக்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் தெரிவித்தார்.
உரத் தட்டுப்பாட்டின் மத்தியிலும் இவ்வருடம் விவசாயிகள் 05இலட்சத்து பன்னிரண்டாயிரம் ஹெக்டேர் நெல் பயிரிட்டுள்ளதாக குறிப்பிட்ட விவசாய அமைச்சர், இரண்டு அரச வங்கிகளிலும் நெல் கொள்வனவுக்கான நிதி விடுவிப்பு இன்னமும் மந்தகதியில் இடம்பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
பிற செய்திகள்