
நாட்டில் மாணவர்களின் கல்வி வியாபாரமாக மாறி விட்டது என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசேப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்:
கல்வியில் சமைத்தும் இன்மையால்,பெற்றோர்கள் பிரபல்ய பாடசாலைகளை நோக்கியே செல்கின்றனர்.நாட்டில் சுமார் 10 ஆயிரம் பாடசாலைகள் இருந்தாலும்.வெறும் 36 பாடசாலைகளையே மக்கள் பார்க்கின்றனர்.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தால் இவ்வாறு பிரச்சினைகள் எழுகிறது.
அதிலும் தரம் 6 க்கனா மாணவர்கள் சேர்ப்பில் பெரும் தொகை கை மாறுகிறது.இது தொடர்பில் இன்று வரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.ஆகவே தான் இந்தப் பாரீட்சை தற்போது பெற்றோர்களின் பரீட்சையாக மாறியுள்ளது.
190 புள்ளிகள் எடுத்தால் கூட அரசியல் செல்வாக்கு இருந்தால் தான் பாடசாலையில் இணைய முடியும்.
இந்த நிலையில் 189 புள்ளி அல்லது அதை விட குறைந்த புள்ளியை பெற்ற மாணவர்களின் நிலை என்ன.இந்த நிலையில் தான் கல்வி அமைச்சர் தான் சொல்லும் விடயங்களை நடைமுறைக்கு கொண்டு வரே வேண்டும் என்றார்.
பிற செய்திகள்