நாட்டின் ஊழல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும்: அமெரிக்கா வலியுறுத்து

கொழும்பு,செப் 11

சட்டத்தின் ஆட்சி, நீதி மற்றும் சுதந்திரம் ஆகியவை ஜனநாயக அமைப்புகளின் முக்கிய தூண்கள் என இலங்கை அரசாங்கத்திற்கு அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் இலங்கையில் நீண்டகாலமாக நிலவி வரும் தண்டனையின்மை மற்றும் ஊழல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்றும் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 51வது அமர்வில் பேசிய அமெரிக்க பிரதிநிதி, ஒரு முக்கிய நடவடிக்கையாக இவற்றுக்கு தீர்வை காணவேண்டும் என கூறியுள்ளார்.

இதேவேளை இலங்கையில் பயங்கரவாத தடை சட்டங்களில் முன்மொழியப்பட்ட மாற்றங்களை ஏற்றுக்கொண்டு தாம் வரவேற்பதாக ஜப்பான் அறிவித்துள்ளது.
ஆனால் நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த அர்த்தமுள்ள நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் எடுக்க வேண்டும் என்றும் ஜப்பான் வலியுறுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *