இலங்கையல் காதலியை சந்திக்க பேருந்தை கடத்திய பதின்ம வயது சிறுவன்!

நேற்று (11) இரவு பிலியந்தலை பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தை கடத்திச் சென்று காதலியைப் பார்க்கச் சென்ற 15 வயது சிறுவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மத்தேகொட சித்தமுல்ல பிரதேசத்தில் வசிக்கும் சிறுவன் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆசியக் கோப்பை இறுதிக் கிரிக்கெட் போட்டியைக் காண பேருந்து நிலையத்தின் ஓரத்தில் பேருந்துகளை நிறுத்திவிட்டு வேறு இடங்களுக்குச் சென்று கிரிக்கெட் போட்டியைக் கண்டுகளித்தனர் பேருந்துகளின் ஓட்டுநர்கள்.

சிறிது நேரம் கழித்து மீண்டும் பேருந்துகள் நிறுத்தப்பட்டிருந்த இடத்திற்கு வந்து பார்த்தபோது பேருந்து ஒன்று இல்லாததை கவனித்தனர். இதனையடுத்து பஸ் சாரதிகள் உடனடியாக இது தொடர்பில் பிலியந்தலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

போலீசார் உடனடியாக விசாரணையை துவக்கினாலும், பல கடைகள் அடைக்கப்பட்டிருந்ததால், சிசிடிவி காட்சிகளை போலீசாரால் பெற முடியவில்லை. இதற்கு பிறகு. பிலியந்தலை பொலிஸ் நிலையத்தின் அறிவித்தலின் பிரகாரம் பல வீதித் தடைகள் போடப்பட்டன.

நள்ளிரவு 12.30 மணியளவில் கெஸ்பேவ – பிலியந்தலை வீதியின் வீதித் தடுப்பில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் அப்பகுதியினூடாகச் சென்ற பேருந்தின் மீது சந்தேகமடைந்து அதனைத் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

அப்போதுதான் கடத்தப்பட்ட பேருந்து என்பதை உறுதி செய்த போலீசார், ஓட முயன்ற வாலிபரை துரத்திச் சென்று கைது செய்தனர்.

காதலியை பார்க்க பஸ்சில் சென்று திரும்பிய போது போலீசாரிடம் சிக்கியது தெரியவந்தது.

அவர் கூறியபடி மொரகஹேன பகுதியில் வசிக்கும் அவரது காதலி, தன்னை சந்திக்க வருமாறு தொலைபேசியில் அழைத்ததால், அவரை சந்திப்பதற்காக பேரூந்தில் பயணிக்க பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார்.

அப்போது பேருந்துகள் இல்லாததால் தான் சிரமத்திற்கு உள்ளாகியதாகவும் அந்த சிறுவன் கூறியுள்ளார். அதன் பின்னர் பஸ் ஒன்றில் சாவி இருந்ததால் அதனை ஓட்டிக்கொண்டு மொரகஹேன பிரதேசத்தில் உள்ள தனது காதலியை சந்திக்க சென்றதாக சிறுவன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கைது செய்யப்பட்ட சிறுவன் இதற்கு முன்னர் தனது காதலியை சந்திப்பதற்காக பஸ் ஒன்றை கடத்திச் சென்றுள்ளதாக மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *