புத்தளம் சால்டர்ன் பகுதியில் குப்பைகளை அகற்றுமாறு மக்கள் கோரிக்கை!

புத்தளம் சால்டர்ன் பகுதியில் கொட்டப்படும் குப்பைகளை உடனடியாக அகற்றுமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கைவிடுக்கின்றனர்.

இந்நிலையில்,புத்தளம் சால்டர்ன் பகுதியில் கொட்டப்படும் குப்பைகளை உடனடியாக அகற்றுமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கைவிடுக்கின்றனர்.

புத்தளம் மாவட்டத்திலேயே அதிகளவிலான உப்பு உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு. வருகின்றது.

இந்த நிலையில் புத்தளம் 2ம் கட்டை சால்டர்ன் பகுதியில் சுமார் 400 ஏக்கருக்கும் அதிகமாக உப்பு உற்பத்தியில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

குறித்த உப்பளத்தை அண்டிய பகுதியில் குப்பைகள் மற்றும் மிருகக் கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றது.

இதனால் அப்பகுதியிலுள்ள குப்பைகள் காற்றுடன் பறந்து உப்பளத்தினுல் கலப்படுகின்றமையையும் காணக்கூடியதாக இருக்கின்றது.

இவ்வாறு குப்பைகள் உப்புடன் கலக்கப்படுகின்றமையினால் உப்பு சுகாதாரமற்ற நிலைக்கும் மாறிவிடுமென மக்கள் கவலைத் தெரிவிக்கின்றனர்.

குறித்த குப்பைகளை அகற்றுவதற்கு புத்தளம் பிரதேச சபைத் தலைவர் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *