புத்தளம் கற்பிட்டி குறிஞ்சிபிட்டி பகுதியில் அமைந்துள்ள தும்புத் தொழிற்சாலையில் பாரிய தீ ஏற்பட்டுள்ளது.
இதன்போது கற்பிட்டி பொலிஸார் மற்றும் கற்பிட்டி விஜய கடற்படையினர் இணைந்து தீயை அனைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது பல இலட்சம் பெருமதியான இயந்திரங்களும் தீக்கிரையாகியுள்ள நிலையில் தேங்காய், சிரட்டைகள், தேங்காய்த் தும்புகளும் தீக்கிரையாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த தீச்சம்பவம் மின்னொழுக்கு காரணமாக ஏற்பட்டிருக்கலாமென பொலிஸார் சந்தேகிப்பதாகத் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளை கற்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பிற செய்திகள்