
இந்தியா,செப் 12
தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றை எட்டுவதற்கான அர்ப்பணிப்பு தொடர்பில் இலங்கை அரசாங்கத்தினால் முன்னேற்றம் எதுவும் காணப்படாமை குறித்து இந்தியா இன்று கவலை தெரிவித்துள்ளது.
ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது அமர்வில் இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல் தொடர்பான கலந்துரையாடலில் பேசிய இந்திய பிரதிநிதிகள், இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வுக்கான உறுதிப்பாடுகள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தால் முன்னேற்றம் எதுவும் காணப்படவில்லை என்பது கவலைக்குரிய விடயம் என்று குறிப்பிட்டனர்.
அண்டை தீவு தேசத்தில் அமைதி மற்றும் நல்லிணக்கம் குறித்த தனது நிலையான பார்வையானது, ஐக்கிய இலங்கையின் கட்டமைப்பிற்குள் அரசியல் தீர்வைக் கொண்டு, அங்கு வாழும் தமிழர்களுக்கு நீதி, அமைதி, சமத்துவம் மற்றும் கண்ணியத்தை உறுதி செய்வதாகும் என்று இந்திய பிரதிநிதிகள் குறிப்பிட்டனர்.