வவுனியாவில் தண்டவாளத்துக்கு அருகில் சடலம் ஆணின் மீட்பு!

வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் ரயில் தண்டவாளத்திற்கு அருகில் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

இன்று காலை தாண்டிக்குளம் பகுதியில் தண்டவாளத்தில் சடலம் ஒன்று காணப்படுவதை அவதாணித்த பிரதேச வாசிகள் இது தொடர்பாக வவுனியா பொலிஸாருக்கு தகவல் வழங்கியிருந்தனர்

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

விசாரணைகளின் படி இறந்தவர் 45 வயது மதிக்கத்தக்க ஆண் என்று அறியமுடிகிறது,

மேலும் நேற்றைய தினம் இரவு வேளையில், ரயிலில் மோதுண்டு இரு கால்களும் துண்டிக்கப்பட்டதனால், கடும் இரத்த போக்கு காரணமாக மரணித்திருக்கலாம் என கருதப்படுகிறது

இதேவேளை இவருக்கு அருகில் ஒரு மோட்டார் சைக்கிள் ஒன்றும் நிறுத்தப்பட்டுள்ளது.

ஒருவேளை நேற்றைய தினம் இரவே தற்கொலைக்கு முயன்றிருக்கலாம் எனவும் கருதப்பட்டு பல கோணங்களில் விசாரனைகளை பொலிஸார் துரிதப்படுத்தியுள்ளனர்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *