மேலும் 10…

மேலும் 10 அமைச்சரவை அமைச்சர்களை நியமிக்கும் சாத்தியம் உள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சரிடம், மேலும் பல அமைச்சரவை அமைச்சர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று கூறப்படுவதன் உண்மை தன்மை குறித்து கேள்வியெழுப்பப்பட்டது.

அதற்கு பதில் வழங்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அமைச்சர், “மேலும் பல அமைச்சரவை அமைச்சர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்று நினைக்கிறேன்.

மேலும் 10 மேலும் பல அமைச்சரவை அமைச்சர்கள் நியமிக்கப்படலாம். அப்போது 30ஆக அதிகரிக்கப்படும்.

பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு இதை விட கூடுதல் உதவித்தொகை கிடைக்கிறது. நம்மை விட பத்து பதினைந்து மடங்கு அதிகமாக வாங்குகிறார்கள். எனவே அதையும் நிறுத்த வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *