தேசிய கைதிகள் தினத்தை முன்னிட்டு 417 கைதிகள் விடுதலை !

தேசிய கைதிகள் தினத்தை முன்னிட்டு மொத்தம் 417 கைதிகள் பொது மன்னிப்பு வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி நேற்று திங்கட்கிழமை 413 ஆண் கைதிகளும் 4 பெண் கைதிகளும் விடுதலை செய்யப்பட்டதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தேசிய கைதிகள் தினத்தை முன்னிட்டு சிறைச்சாலைகளில் கழித்த காலத்தின் அடிப்படையில் 165 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது

அபராதம் செலுத்த தவறியமைக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்த 252 கைதிகளும் பொதுமன்னிப்பு வழங்கி விடுவிக்கப்பட்டதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *