19ஆம் திகதி விசேட அரசாங்க விடுமுறை!

<!–

19ஆம் திகதி விசேட அரசாங்க விடுமுறை! – Athavan News

நாட்டில் எதிர்வரும் செப்டம்பர் 19ஆம் திகதி விசேட அரசாங்க விடுமுறையாக பொது நிர்வாகம் மற்றும் உட்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கைக் குறிக்கும் வகையில் இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பதற்கு அரசாங்க விடுமுறை தடையாக இருக்கக் கூடாது என பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் விடுத்துள்ள அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அன்றைய தினம் தேசிய துக்க நாளாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *