தென்மராட்சி பாடசாலைகளில் இன்றுமுதல் பைஸர் தடுப்பூசி

தென்மராட்சி கல்வி வலயப் பாடசாலைகளில் தரம் 7 மாணவர்களுக்கு முதலாம் கட்ட பைஸர் தடுப்பூசியும் ஏற்கனவே முதலாம் கட்ட பைஸர் தடுப்பூசி ஏற்றிய மாணவர்களுக்கு இரண்டாம் கட்டத் தடுப்பூசியும் வழங்கப்படவுள்ளது என சாவகச்சேரி சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனை அறிவித்துள்ளது.

அதன்படி இன்று தொடக்கம் எதிர்வரும் 26ஆம் திகதிவரை பாடசாலைகளில் வழங்கப்படவுள்ளது.

இன்று 13ஆம் திகதி மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரியிலும் எதிர்வரும் 15 ஆம் திகதி மட்டுவில் சந்திரபுர ஸ்கந்தவரோதய மகா வித்தியாலயத்திலும் 19ஆம் திகதி வரணி மத்திய கல்லூரியிலும் 20ஆம் திகதி உசன் இராமநாதன் மகா வித்தியாலயத்திலும் 21 ஆம் திகதி சாவகச்சேரி இந்துக் கல்லூரி மற்றும் கைதடி முத்துக்குமாரசுவாமி மகா வித்தியாலயத்திலும் 22 ஆம் திகதி சாவகச்சேரி மகளிர் கல்லூரியிலும், 26 ஆம் திகதி நாவற்குழி மகா வித்தியாலயத்திலும் தடுப்பூசி ஏற்றப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி வழங்கப்படும் பாடசாலைகளை அண்டியுள்ள பாடசாலைகளின் மாணவர்கள் குறித்த தினங்களில் அந்தந்த நிலையங்களுக்கு சென்று தடுப்பூசி பெற்றுக் கொள்ளலாமெனவும் மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *