
வாழைப்பழ ஏற்றுமதி மூலம் இந்த வருடத்தின் முதல் 6 மாத காலப்பகுதியில் 28 ஆயிரம் அமெரிக்க டொலர் வருமானமாக ஈட்டப்பட்டுள்ளது என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:
வாழைச் செய்கையை ஏற்றுமதி செய்வதற்கான ஊக்குவிக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
‘வாழைச் செய்கையை ஏற்றுமதி செய்யும் நிலைமைக்கு’ என்ற அபிவிருத்தி வேலைத்திட்டதின் கீழ் வருடாந்தம் 52 ஆயிரம் கிலோ புளிப்பு வாழை உற்பத்தி செய்யப்படுகிறது.
அவற்றில் ஒரு மெற்றிக் தொன் புளி வாழையை 600 முதல் 700 அமெரிக்க டொலருக்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதன்மூலம் இந்த வருடத்தின் முதல் 6 மாத காலப்பகுதியில் 28 ஆயிரம் அமெரிக்க டொலர் வருமானமாக ஈட்டப்பட்டுள்ளது.
எதிர்வரும் காலங்களில் ஏற்றுமதிக்காக வாழை செய்கை தொடர்பான முறையான வேலைத்திட்டம் மாவட்ட மட்டத்தில் முன்னெடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்– என்றார்.