
கொழும்பு, செப் 13
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நாளொன்றுக்கு 25 வீடுடைப்பு மற்றும் தங்கச் சங்கிலிகளை பறிக்கும் சம்பவங்கள் பதிவாகுவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
போதைப்பொருட்களுக்கு அடிமையானவர்களே இவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபடுவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எஸ்.ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக இலங்கைக்கு ஐஸ் போதைப்பொருள் கடத்தப்படுகின்றமை அதிகரித்துள்ளதாகவும் இதன்போது அமைச்சின் செயலாளர் கூறியுள்ளார்.