தீர்வு வழங்க மறுத்தால் 29 ஆம் திகதி போராட்டம்!

அரசால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 2022ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் அரச அதிகாரிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளமையைக் கண்டித்து நாடு தழுவிய ரீதியில் பணிப்புறக்கணிப்புப் போராட்டம் நடத்தப்படவுள்ளது என்று ஸ்ரீலங்கா அரச அதிகாரிகளின் தொழிற்சங்க ஒன்றியங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

அரச அதிகாரிகளின் பிரச்சினைக்குத் தீர்வு வழங்க வேண்டும் என்று கடந்த 13 ஆம் திகதி ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவிடம் சமர்ப்பிக்கப்பட்ட எழுத்துமூல கோரிக்கைக்கு இதுவரை எந்தப் பதிலும் கிடைக்கவில்லை என்று அந்த அமைப்பின் தேசிய அமைப்பாளர் பிரதீப் பஸ்நாயக்க தெரிவித்துள்ளார்.

நவம்பர் 28 ஆம் திகதிக்கு முன்னர் எமது கோரிக்கைக்குப் பதில் கிடைக்காவிட்டால், நவம்பர் 29ஆம் திகதி நாடு தழுவிய பணிப் புறக்கணிப்புப் போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கிராம அலுவலர்கள், ஒருங்கிணைப்பு அதிகாரிகள், முகாமையாளர் சேவை அதிகாரிகள், விவசாய பரிசோதனை உதவி அதிகாரிகள், காரியாலய சேவை அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் இந்தப் பணிப் புறக்கணிப்பில் பங்கேற்பார்கள் என்றும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *