
கொழும்பு, செப் 13
பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் தற்போதைய நாட்டின் சூழ்நிலைகள் தொடர்பில் தீர்மானங்களை மேற்கொள்ள 5 பேர் கொண்ட அமைச்சரவை உப குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி பிரதமர் மற்றும் அமைச்சரவை அமைச்சர்கள் இந்த உபக் குழுவில் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டின் பொருளாதார சிக்கல் நிலைமைகள் தொடர்பில் பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் தற்போதைய சூழ்நிலைகள் குறித்து தீர்மானங்களை ஆராய இந்த உப குழு நடவடிக்கை எடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.