
கொழும்பு, செப் 13
மாலபே பகுதியில் அமைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் வீட்டிற்கு சேதம் விளைவித்த சம்பவம் தொடர்பில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்கள் கஹவத்தை மற்றும் கம்புறுபிட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என காவல்துறை தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் வீட்டிற்கு அண்மையில் சேதம் ஏற்படுத்தப்பட்டிருந்தது. இதன்காரணமாக பல பெறுமதியான உடைமைகளுக்கு சேதம் ஏற்பட்டிருந்தது.