பலப்பிட்டியவில் ரயில் மோதி ஒருவர் உயிரிழப்பு

பலப்பிட்டியில் இன்று ரயில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்

பலப்பிட்டிய – வெனமுல்ல பகுதியில் கொழும்பு நோக்கிப் பயணித்த ரயிலுடன் வான் மோதி இடம்பெற்ற விபத்திலேயே குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

63 வயதான வானின் சாரதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, காலி – மக்குளுவ பகுதியில் ரஜரட்ட ரெஜின ரயிலுடன் வான் மோதியதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

ரயிலுடன் மோதிய வான், மோட்டார் சைக்கிள் ஒன்றுடனும் மோதியுள்ளது.

இதன்போது, மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயமடைந்துள்ளதுடன், அவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *