பால் புரக்கேறி 4 நாள் சிசு சாவு

யாழ். போதனா மருத்துவமனையில் தாய்ப்பால் புரக்கேறியதில் பிறந்து நான்கு நாள்களான பெண் சிசு உயிரிழந்துள்ளது.

இந்தச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.

மயிலிட்டி வடக்கு மயிலிட்டியை சேர்ந்த தம்பதியரின் சிசுவே இவ்வாறு தாய்ப்பால் புரக்கேறி உயிரிழந்துள்ளது.

சிசுவுக்கு பால் ஊட்டிவிட்டு மீண்டும் பார்த்தபோது சிசு அசைவற்று காணப்பட்டுள்ளது.

உடனடியான மருத்துவர்கள் சிசுவை பரிசோதித்தபோது சிசு உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.

சிசுவுக்கு மேற்கொண்ட பிரேதப் பரிசோதனையில் பால் மூச்சுக்குழாயில் புகுந்து புரக்கேறி உயிரிழந்துள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் யாழ்.போதனா மருத்துவமனையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *