நீர்க் குழாய் உடைந்ததால் குடி நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது

திருகோணமலை கண்டி பிரதான வீதியின் முள்ளிப்பொத்தானையில் உள்ள தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபைக்கு சொந்தமான பிரதான நீர் குழாய் உடைந்துள்ளதால் குடி நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது.

குறித்த குடி நீர் விநியோகமானது நேற்று (12) மாலை முதல் தடைப்பட்டுள்ளதுடன் குடி நீர் இன்றி மக்கள் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர். குறித்த பிரதான நீர் குழாயானது பல தடவை உடைப்பெடுப்பதும் இதனை கொழும்பில் இருந்து வந்தே திருத்த பணி இடம் பெறுவதுமாக உள்ளது.

தற்போதும் இன்று (13) வரை திருத்த பணி இடம் பெற்று வந்தாலும் நீர் விநியோகம் வழங்கப்படாமையால் குடிப்பதற்கு கூட நீர் இன்மையால் மக்கள் பல அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றனர்.

இப் பிரதான குழாய் மூலமாக தம்பலகாமம், கிண்ணியா,திருகோணமலை, உட்பட பல பிரதேச மக்கள் நீரினை பெற்று வருகின்றனர். இது தொடர்பில் இப் பிரதான நீரேந்து பம்பியை நிலையாக செய்வதற்கு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை கவனம் செலுத்துமா என மக்கள் அங்கலாய்க்கின்றனர்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *