
கொழும்பு,செப் 13
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே ஆதிவாசிகள் பரம்பரையைச் சேர்ந்தவர் என்பதன் காரணமாகவா பழிவாங்கலுக்கு உட்படுத்தப்படுகிறார் என கேள்வியெழுப்பிய ஆதிவாசிகள் இனத் தலைவர் ஊருவரிகே வன்னிலஎத்தோ, வசந்த முதலிகேவை விடுதலை செய்வதற்கு உடன் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில் , அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே ஆதிவாசிகள் பரம்பரையைச் சேர்ந்தவர் என்பதாலா பழிவாங்கலுக்கு உற்படுத்தப்படுகிறாரா? பொது பிரச்சினைகளுக்காக குரல் கொடுப்பவர்கள் எவராக இருப்பினும் இவ்வாறு பழிவாங்கலுக்கு உட்படுத்தப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.
இவர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள ஆர்ப்பாட்டங்களின் காரணமாகவே தற்போதைய ஜனாதிபதிக்கு அந்த பதவியைப் பெற்றுக் கொள்ள முடிந்தது. எனவே அவரை பழிவாங்குவதற்கு பதில் , ஏதேனும் தவறுகள் இடம்பெற்றிருந்தால் அவற்றுக்கு உரிய நடவடிக்கை எடுக்க முயற்சிக்க வேண்டும்.
அந்த நடடிக்கைகள் நீதிமன்றத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட வேண்டும். எனவே அவரை தொடர்ந்தும் தடுத்து வைத்து பழிவாங்கலுக்கு உட்படுத்தாமல் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியிடமும் பிராமரிடமும் கோரிக்கை விடுக்கிறோம் என்றார்.