கடவுச்சீட்டுக்கான கேள்வி அதிகரிப்பு

கொழும்பு,செப் 13

நாட்டில் கடந்த 8 மாதங்களில் மாத்திரம்  7 இலட்சத்துக்கும் அதிகமான கடவுச்சீட்டுக்கள் வழங்கப்பட்டள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு  திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன் இதுவரை  குடிவரவு மற்றும் குடியகல்வு  திணைக்களத்தில் வருடம் முழுவதுமே ஒரு லட்சத்து 71 ஆயிரத்து 168 கடவுச்சீட்டுக்களே விநியோகிக்கப்பட்டு வந்த நிலையில் இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம்  7 இலட்சத்திற்கும் அதிகமான கடவுச்சீட்டுக்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுளளது.

இதன்படி இந்த மாதத்தில் மாத்திரம் கடவுச்சிட்டினை பெற்றுக்கொள்வதற்காக  ஒரு இலட்சத்து 16 ஆயிரத்து 244 பேர் விண்ணப்பித்துள்ளதாகவும்  குடிவரவு மற்றும் குடியகல்வு  திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை நாளாந்தம் குடிவரவு மற்றும் குடியகல்வு  திணைக்களத்தில் நான்காயிரம் பேர் கடவுச்சீட்டிற்க்காக விண்ணப்பித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது,
இதன்படி தற்போது  நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக வெளிநாடுகளுக்கு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமை குறிப்பிடதக்கது.
.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *