வவுனியாவில் ரயிலுடன் மோதி ஒருவர் உயிரிழப்பு

வவுனியா,செப் 13

வவுனியா, தாண்டிக்குளத்தில் ரயிலுடன் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

வவுனியா – ஈஸ்வரிபுரத்தை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான, 44 வயதான நபர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *