செல்போன் வெடித்தில் 8 மாத பெண் குழந்தைக்கு நேர்ந்த விபரீதம்!

செல்போன் வெடித்து 8 மாத பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இன்றைய நவீன யுகத்தில் செல்போன்கள் மக்களின் பயன்பாட்டில் முக்கிய அங்கமாகிவிட்டன.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அதிகம் பயன்படுத்தும் சாதனம் செல்போன். இந்தக் கைத்தொலைபேசிகள் விழித்திருப்பது முதல் விழித்தெழும் வரை அதிகமானோர் பயன்படுத்தும் இன்றியமையாத சாதனமாக மாறிவிட்டது.

இதனால் செல்போன் பயன்படுத்துபவர்கள் இரவில் செல்போனை சார்ஜ் செய்துவிட்டு செல்கின்றனர்.

இந்தியாவின் உத்தரபிரதேசத்தில் உள்ள பரேலி மாவட்டம் அருகே அதிக நேரம் சார்ஜ் செய்த செல்போன் வெடித்து சிதறியதில் 8 மாத பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

பரேலி மாவட்டத்தில் உள்ள பசுமி கிராமத்தைச் சேர்ந்த சுனில்குமார் காஷ்யப் மற்றும் குசும் காஷ்யப் தம்பதிக்கு 8 மாத பெண் குழந்தை இருந்தது.

சம்பவத்தன்று குழந்தை படுக்கையில் தூங்கி கொண்டிருந்த போது, ​​சூரிய சக்தியை பயன்படுத்தி சுனில் செல்போனை சார்ஜ் செய்துள்ளார்.

குழந்தை படுத்திருந்த படுக்கையில் செல்போனை வைத்துவிட்டு அனைவரும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென பலத்த சத்தத்துடன் செல்போன் வெடித்தது.

இதனால் படுக்கையில் தீப்பிடித்தது. 30 சதவீத தீக்காயம் அடைந்த பெண் குழந்தை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *