
யாழ். மாவட்டத்தில் புதிதாக சுயதொழில் ஆரம்பிக்க விரும்புவோர் மற்றும் தொழில் தேடுவோரைப் பதிவு செய்வதற்கு மாவட்ட செயலகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என யாழ்.மாவட்டச் செயலர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் ஊடகங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்ட அறிக்கையில்
அனைத்து பிரதேச செயலகப் பிரிவுகளிலுமுள்ள தொழில் தேடுவோர் மற்றும் புதிதாக சுயதொழில் முயற்சிகளை ஆரம்பிப்பதற்கு ஆர்வம் கொண்டிருப்போரை யாழ்.மாவட்ட செயலகம் பதிவு செய்யவுள்ளது.
இதன் ஆரம்ப கட்டமாக யாழ்ப்பாணம், நல்லுார், கோப்பாய், சாவகச்சேரி ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள அனைத்து கிராமஅலுவலர் பிரிவுகளூடாகவும் பதிவுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இதற்கான விண்ணப்பப் படிவங்களை தங்கள் கிராம அலுவலர் அலுவலகம் மற்றும் பிரதேச செயலகத்தில் பெற்று பூர்த்தி செய்து எதிர்வரும் 20 ஆம் செவ்வாய்க்கிழமைக்கு முன்னர் கிராம சேவையாளர் அலுவலகம் மற்றும் பிரதேச செயலகத்தில் ஒப்படைக்கப்படவேண்டும் – என்றுள்ளது.