வரலாற்று நாயகன் தியாக திலீபனின் நினைவேந்தல்; கட்சிகளிடையே பிடுங்குப்பாடு..!

வரலாற்று நாயகன் தியாகி திலீபனின் நினைவேந்தலை நடத்துவது யார்?

கட்சிகளிடையே நேற்று நல்லுரில் பிடுங்குப்பாடு

தியாகத்தை கொச்சைப்படுத்தாதீர் மக்கள் கோரிக்கை

பன்­னிரு கோரிக்­கை­களை முன்­வைத்து உணவு தவிர்ப்­புப் போராட்­டத்­தில் ஈடு­பட்டு உயிர் நீத்த தியாக தீபம் திலீ­ப­னின் 35 ஆவது ஆண்டு நினைவு தினம் கடைப்­பி­டிக்­கப்­ப­ட­வுள்ள நிலை­யில், நினைவு தினத்­தைக் கடைப்­பி­டிப்­பது தொடர்­பில் தமிழ் அர­சி­யல் கட்­சி­க­ளி­டையே முரண்­பா­டு­கள் ஏற்­பட்­டுள்­ளன. இது பொது­மக்­கள் மத்­தி­யில் பெரும் அதி­ருப்­தி­யை­யும், விச­னத்­தை­யும் ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

நேற்று நல்­லூ­ரில் உள்ள தியாகதீபம் திலீப­னின் நினை­வி­டத்­துக்கு அருகே தமிழ்த் தேசிய மக்­கள் முன்­ன­ணி­யைச் சேர்ந்­த­வர்­க­ளுக்­கும், யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை முதல்­வர் வி.மணி­வண்­ணன் சார்­பு­டை­யோ­ருக்­கும் இடை­யிலே முரண்­பாடு ஏற்­பட்­டுள்­ளது. இரு தரப்­பி­ன­ரும் முரண்­பட்டு, தர்க்­கத்­தில் ஈடு­பட்­ட­து­டன் ஒரு தரப்பை மற்­றைய தரப்பை ஒளிப்­ப­டங்­கள், காணொ­லி­கள் எடுத்­துக் கொண்­டது என்­றும், வேறு சில குழுக்­க­ளும் அங்கு வந்து தர்க்­கத்­தில் ஈடு­பட்­டன என்­றும் அங்­கி­ருந்த பொது­மக்­கள் தெரி­வித்­த­னர்.

தமிழ்த் தேசிய மக்­கள் முன்­ன­ணி­யும், மணி­வண்­ணன் சார்பு அணி­யி­ன­ரும் அந்த இடத்­தில் நினை­வேந்­த­லுக்­கான ஏற்­பா­டு­களை மேற்­கொண்­டுள்­ள­னர். இதுவே இரு தரப்­பு­க­ளுக்கு இடை­யில் முரண்­பா­டு­களை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

இது தொடர்­பில் தமிழ்த் தேசிய மக்­கள் முன்­னணி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் செ.கஜேந்­தி­ர­னி­டம் கேட்­ட­போது, “தியாக தீபம் திலீ­பன் நினை­வி­டத்­தில் கடந்த சில ஆண்­டு­க­ளாக நாமே நினை­வேந்­தலை நடத்தி வரு­கின்­றோம். இம்­மு­றை­யும் அங்கு நினை­வேந்­தல் நடத்­து­வ­தற்­கான கொட்­ட­கையை அமைத்­துள்­ளோம். அங்கு வந்த மணி­வண்­ணன் சார்­பு­டை­ய­வர்­கள், அந்த இடத்­தில் கொட்­டகை அமைக்க வேண்­டாம் என்று தடுக்க முயன்­ற­னர். அந்த தாங்­கள் நினை­வேந்­தல் நடத்­தப் போகின்­றோம் என்று முரண்­பட்­ட­னர்.

பொலி­ஸார் மற்­றும் இரா­ணு­வக் கெடு­பி­டி­க­ளால் கடந்த சில ஆண்­டு­க­ளாக யாரும் நினை­வேந்­தலை நடத்த முன்­வ­ர­வில்லை. நாமே நினை­வேந்­தலை நடத்­தி­யி­ருந்­தோம். கடந்த ஆண்டு அதற்­கா­கக் கைதும் செய்­யப்­பட்­டோம். இவ்­வாறு இருக்­கை­யில் திடீ­ரென வந்­த­வர்­கள் நாம் வழ­மை­யாக நினை­வேந்­தல் செய்­யும் இடத்­தில் நினை­வேந்­தல் செய்­வ­தைத் தடுப்­பது முறை­யற்­றது “என்று தெரி­வித்­தார்.

இந்­தச் சம்­ப­வம் தொடர்­பாக யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை உறுப்­பி­னர் பார்த்­தீ­ப­னி­டம் கேட்­ட­போது, “நல்­லூ­ரில் உள்ள தியாக தீபம் திலீ­ப­னின் நினை­வி­டத்­தில் திலீ­ப­னின் நிரந்­தர உரு­வப் படத்தை அமைத்து அஞ்­சலி செலுத்­து­வ­தற்கு ஏற்­பா­டு­கள் செய்­யப்­பட்­டுள்­ளன. அந்த இடத்­தில் கொட்­டகை அமைத்­த­தா­லேயே முரண்­பா­டு­கள் ஏற்­பட்­டன” என்று தெரி­வித்­தார்.

தமிழ் மக்­க­ளுக்­காக பன்­னிரு நாள்­கள் உணவு தவிர்த்து தனது உயிரை ஈந்த திலீ­ப­னின் தியா­கத்­தைக் கொச்­சைப்­ப­டுத்­தும் வகை­யில் அர­சி­யல்­வா­தி­கள் நடந்து கொள்­கின்­ற­னர் என்று சம்­பவ இடத்­தில் இருந்த பொது­மக்­கள் விச­னத்­து­டன் தெரி­வித்­த­னர்.

உணர்­வெ­ழுச்­சி­யு­டன் நடத்­தப்­பட்ட வேண்­டிய நிகழ்­வு­க­ளில் அர­சி­ய­லைப் புகுத்தி சுய­லா­பம் தேட அர­சி­யல்­வா­தி­கள் முய­லக்­கூ­டாது. இவ்­வா­றான செயற்­பா­டு­களை அர­சி­யல் கட்­சி­கள் தவிர்­த­துக் கொள்ள வேண்­டும் என்­றும் அவர்­கள் வலி­யு­றுத்­தி­னர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *