கோட்டாபய வழங்கிய இணைத்தலைமை பதவி ரத்து

கொழும்பு,செப் 14

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வழங்கிய மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைமைப் பதவிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

புதிய நியமனங்கள் இடம்பெற்ற பின்னர் அது தொடர்பான வழிகாட்டல் வழங்கப்படும் என்று பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலர் மாயாதுன்னே அறிவித்துள்ளார்.

இந்தக் கடிதம் மாவட்டச் செயலகங்களுக்குக் கிடைக்கப்பெற்றுள்ளது.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“முன்னாள் ஜனாதிபதியின் ஆட்சிக்காலத்தில் நியமிக்கப்பட்டிருந்த மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர்கள் மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர்களின் நியமனங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளமையால் புதிய நியமனங்கள் மேற்கொள்ளப்படும் வரை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டங்களை நடாத்திச் செல்வதற்கான இயலுமை காணப்படுவதில்லை.

ஆகையால், ஜனாதிபதியால் புதிய மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர்கள் மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக்குழு தலைவர்கள் நியமிக்கப்பட்டதன் பிற்பாடு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டங்களை நடத்துவதற்கு அவசியப்படும் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அறியத்தருகின்றேன்.

அத்தோடு, புதிய தலைவர்கள் நியமிக்கப்பட்டதன் பின்னர் ஜனாதிபதி செயலகத்தினால் வழங்கப்படும் புதிய ஆலோசனைகளின் படி, அவர்களின் எரிபொருள் செலவு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *